மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி எண்ணும் எழுத்தும் இயக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்து பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் மாணவர்கள் கற்றலில் பின்தங்கி உள்ளனர். எனவே 1 முதல் 3-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் எண்ணறிவையும் எழுத்தறிவையும் 2025-ம் கல்வியாண்டிற்குள் பெற்றிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குறிக்கோள் நிறைவேற தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
செம்மைப்படுத்துதல்
இதனையொட்டி 1 முதல் 3-ம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி நடைபெறும். எனவே ஆசிரியர்கள் பயிற்சியில் நிறைய கற்றுக்கொண்டு தங்களை செம்மைப்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எளிமையான கற்றல், கற்பித்தல் துணக்கருவிகளுடன் செல்ல வேண்டும். ஆசிரியர்களிடம் தேடல் இருக்க வேண்டும். மேலும் காலத்திற்கு சூழலுக்கு ஏற்றார் போல் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன அனைத்து கல்வியாளர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதுநிலை விரிவுரையாளர் முருகன் வரவேற்று பேசினார். முடிவில் விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.