மாணவி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுகம்பட்டி சில்லத்துப்பட்டியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் -செல்லம்மாள். இவர்களது மகள் காளியம்பாள் (வயது 8) அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். வைத்திலிங்கம் இறந்து விட்டதால் கூலி வேலைக்கு செல்லும் தாயாருடன் விடுமுறை நாட்களில் காளியம்பாள் ஆடு மேய்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வழிதவறி சென்ற ஆட்டை விரட்டி கொண்டு காளியம்பாள் சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் மாணவி தவறி விழுந்தார். இதில் மூச்சுத்திணறி மாணவி பரிதாபமாக இறந்தார்.
மாணவியின் உடல் மீட்பு
இந்நிலையில், இரவு வரை மாணவி வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்து ஆடு மேய்த்த பகுதியில் தேடிப் பார்த்தபோது மாணவி உடல் கிணற்றுக்குள் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கி மாணவியின் உடலை மீட்டனர். அப்போது மாணவியின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுதது அங்கு நின்றவர்களையும் கண்கலங்க வைத்தது.
சோகம்
இதையடுத்து கீரனூர் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.