புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கட்டுமாவடி பகுதியில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடர்ந்த தரைப்பகுதி வெளியே தெரிந்தது. மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு கடல்நீர் உள்வாங்குவது மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து கணேசபுரத்தைச் சேர்ந்த மீனவர் தவமணி கூறுகையில், 'கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றுக்கு கொண்டல் காற்று அல்லது இழுவான் கொண்டல் என்று கூறுவார்கள். இந்த காற்று வீசும்போது கரையோர பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் அமாவாசை நாட்களிலும் கரையோரப் பகுதிகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசக்கூடிய காற்றுக்கு கச்சான் காற்று என்று பெயர்.
இந்த காற்று வீசும்போது கரையோர பகுதியில் உள்ள நீரோட்டம் முழுவதும் கடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடல் உள்வாங்கி கரையோர பகுதியில் உள்ள பாசிகளும், சேற்று பகுதிகளும் வெளியே தெரியும். அதேபோன்று பவுர்ணமி நாளிலும் மற்றும் சந்திரன் கிழக்கு பகுதியில் இருக்கும்போதும் கரையோர பகுதிகளில் உள்ள நீரோட்டம் கடலுக்குள் சென்றுவிடும். இதனால் கடல் உள்வாங்கும். இந்த சுழற்சி முறையானது காற்று மற்றும் சந்திரனின் நிலையைப் பொறுத்து அமைகிறது. இது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வாகும், என்று கூறினார். இந்நிலையில் நேற்று மாலை கரைப்பகுதியில் நீரோட்டம் அதிகரித்து கடல் மீண்டும் இயல்பு நிலையில் காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.