ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் மே 21 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் தொடர்ச்சியாக விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுதுபொருள், புத்தகம் உள்ளிட்டவைகளை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் A.H.ஹாஜா ஷரீப், துணைத்தலைவர் A.ஷரஃபுதீன், ஷிஸ்வா அமீர் M.S.M.யூசுஃப், சிஸ்யா தலைவர் Z.முஹம்மது தம்பி, செயலாளர் நஜ்புதீன், பொருளாளர் M.R.சாலிஹ், துணைத்தலைவர் M.F.முஹம்மது சலீம் மற்றும் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினர்.
இதற்கான ஏற்பாட்டினை சிஸ்யாவின் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட மாணவர்கள் வருங்காலங்களில் இதுபோன்ற பயனுள்ள முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சிஸ்யாவின் ஆக்கப்பூர்வமான பணிகள் உத்வேகத்துடன் தொடர்ந்து நடைபெறும் என்றும் இம்முகாம் வெற்றிபெற உடலால் உழைத்து, உளமாற பிரார்த்தித்து, பொருளால் உதவிய அனைவருக்கும் எனவும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.