தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராமப்புறங்கள் உள்ளது. அரசின் அனைத்து தேவைக்கும் பல கிலோ மீட்டர் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. அத னால் தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண் டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. காரங்காடு,முள்ளிமுனை உட்பட எஸ். பி.பட்டினம் வரையிலும் கடற்கரை பகுதியாகும்.
இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெருவது உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரம் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது இப்பகுதி மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திருவாடானை தாலுகாவில் இருந்த R.S மங்களம் பகுதியை தனி தாலுகாவாக அறிவித்தது இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. இதே போல் தொண்டியை தனி தாலுகாவாக அறிவித் தால் இப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள்.
தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது.
எஸ்.பி.பட்டிணத்தி லிருந்து திருவாடானை செல்ல வேண்டும் என்றால் தொண்டி வழி யாக சுமார் 30 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதே போல் முள்ளிமுனை எம்.ஆர். பட்டினம் உள்ளிட்ட கடைகோடி கிராமங்களிலிருந்து அலுவல் பணியின் காரணமாக மக்கள் செல்வதில் கடும் சிரமப்படுகின்றனர். தற்போது பேரூராட்சியாக உள்ள தொண்டியை தனி தாலுவாக அறிவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.