ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபம் அரசு தொடக்கப்பள்ளியில் 39 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்தநிலையில் 4-ம் வகுப்பு பயிலும் மாணவர் பரத் (வயது 9) மீது மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமியை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பணியிடை நீக்கம் செய்துள்ளார். பள்ளிக்கட்டிடம் பலவீனமாக இருந்ததற்கு தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குமரேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மணிகண்டன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.