புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையே டெமு ரெயில் சேவை இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதில் விருதுநகர்-காரைக்குடி இடையே மட்டும் கடந்த நவம்பர் மாதம் முதல் சேவை தொடங்கப்பட்டது. காரைக்குடி-திருச்சி இடையே மட்டும் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. காரைக்குடி-திருச்சி இடையே மீண்டும் டெமு ரெயிலை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இந்த ரெயில் சிறப்பு ரெயிலாக வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மாலை 4.53 மணிக்கு வரும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து வருகிற 19-ந் தேதி முதல் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை 10.22 மணிக்கு வந்து சேரும். அதன்பிறகு அங்கிருந்து திருச்சிக்கு காலை 11.35 மணிக்கு சென்றடையும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.