தொண்டி அருகே உள்ள சிங்காரவேலர் நகர் லாஞ்சியடியில் தமிழ்நாடு பட்டங்கட்டிகடையர் பேரவையின் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு பட்டங் கட்டி கடையர் பேரவை தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். சிங்காரவேலர் நகர் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். போட்டியில் ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 34 பாய்மர படகுகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை தொண்டி புதுக்குடி கருப்பையா, 2-வது பரிசை மோர் பண்ணை ஈஸ்வரன், 3-வது பரிசை தொண்டி புதுக்குடி இளஞ்சியம், 4-வது பரிசை முள்ளிமுனை திரிசங்கு, 5-வது பரிசை தொண்டி புதுக்குடி நீலகண்டன், 6-வது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி குணா ஆகியோரது படகுகள் பெற்றன. வெற்றிபெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கடலோர காவல் படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.