அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மகேஷ்வரி சண்முகநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விஜயபுரம், கொடிவயல் ஊராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சவுந்தர்ராஜன் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டம் பற்றி குறிப்பிட்ட சில விவரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேட்டு உள்ளார். மேலும் இதுதொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் பதில் கேட்டுள்ளார். அதற்கு அலுவலர்கள் பதில் கூறாமல் இருந்துள்ளனர். இதையடுத்து கூட்டம் முடிந்து அனைத்து கவுன்சிலர்களும் வெளியே சென்று விட்டனர். 16-வது வார்டு கவுன்சிலர் தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவேன் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமங்கள்) சிங்காரவடிவேல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி 2 வாரங்களில் பதில் கிடைக்கும் என உறுதி அளித்தார். இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.