பாட்டி-பேத்தி
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத்தெருவை சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இருவருடைய மகள் நூரா பாத்திமா(12). தாயார் பாத்திமா பீவி(70).
ஜூலை 1 வெள்ளிக்கிழமை இரவு நீர்முளை கடைத்தெருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாத்திமா பீவி தனது பேத்தி நூரா பாத்திமாவுடன் சென்று விட்டு வீட்டுக்கு நடந்தது வந்து கொண்டிருந்தார்.
கார் மோதி பலி
அப்போது வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
பின்னர் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாட்டி-பேத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தில் உயிரிழந்த நூரா பாத்திமா அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவர் கைது
இதுதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வாய்மேடு அருகே உள்ள ராஜன்கட்டளை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைஞாயிறு அருகே கார் மோதி பாட்டி-பேத்தி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.