திருவாரூர் வழியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் வழியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
செயற்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் எடையூர். மணிமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருவாரூர்- காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிகள் நிறைவுற்றும் இதுவரை இந்த வழித்தடத்தில் சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி போன்ற ஊர்களை சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே இந்த வழித்தடத்தில் சென்னை வரை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கவேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த சென்னை-காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவாரூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
காரைக்குடி வழியாக சென்னைக்கு பகலில் செல்லும் அந்தியோதயா ரெயிலை இயக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சமூக ஆர்வலர் துரை ராயப்பன், சங்க துணை செயலாளர் ஆசைத்தம்பி, செயற்குழு உறுப்பினர்கள் கமல், சசி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.