புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த தன. விமல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் சாலைகளை பலப்படுத்தும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக உரிய நேரத்தில் வரைவோலை எடுத்து விண்ணப்பித்தேன். டெண்டர் நடவடிக்கையின்போது, தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் போலி ஆவணங்களை சமர்ப்பித்த தனிநபரிடம் 20 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டரை ஒதுக்குவதாக தெரியவருகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுக்கோட்டை திருவரங்குளம் பிளாக்கிற்கு உட்பட்ட 5 சாலைகளை பலப்படுத்தும் பணிக்கான ரூ.1.48 கோடி மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.