கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தேர்வுக்காக ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அனைத்துப் பள்ளிகளில் பெற்றோர்கள் கலந்து கொண்டு மேலாண்மைக்குழு நிர்வாகிகளை தேர்வு செய்தனர். ஆனால் சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு அமைப்பது பற்றி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் சில குறிப்பிட்ட பெற்றோர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற ஏராளமான பெற்றோர்களும் அனைத்து பெற்றோருக்கும் தகவல் கொடுத்த பிறகே பள்ளி மேலாண்மைக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அதனால் காலையில் ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மீண்டும் மாலையில் நடத்தப்பட்டது. அப்போதும் கலந்து கொண்ட பெற்றோர்கள் அனைத்து பெற்றோர்களுக்கும் அழைப்பு கொடுத்து மேலாண்மைக்குழு நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதனால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தகவல் சொல்லாமல் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்ய இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.