ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் வரவேற்புரை மற்றும் கூட்டத்திற்கான நோக்கவுரையை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் ஆற்றினார். பார்வையாளராக கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கல்வியாளராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுகுமார், ஊராட்சி பிரதிநிதியாக பானுமதியும், கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட 125 பெற்றோர்கள் சார்பில் 10 பெண் மாணவிகள் பிரதிநிதியும், 5 ஆண் மாணவர்கள் பிரதிநிதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக கவிதாவும், துணைத்தலைவராக கற்பகமும், சுயநிதி குழு உறுப்பினராக மாலினியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் உறுப்பினருக்கான சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
புரவலராக எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், ஆசிரியர்கள் (10 புரவலர்கள்) ரூ.10 ஆயிரத்து 500 நிதி வழங்கினார்கள். காளிமுத்து கலைக்குழு சார்பாக நாட்டுப்புறபாடல் பாடப்பட்டு எஸ்.எம்.சி. பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.