வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி மும்பை - நாகை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்த பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 10 நாட்களுக்கு பெருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள்.
எனவே வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் மராட்டிய பக்தர்கள் கலந்து கொள்ள வசதியாக மத்திய ரெயில்வே 2 சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது.
சிறப்பு ரெயில்கள்
இதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு மும்பை எல்.டி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:01161) மறுநாள் மாலை 5.40 மணிக்கு நாகை சென்றடையும். இதே ரெயில் (01162) 28-ந் தேதி காலை 6.50 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 3.05 மணிக்கு எல்.டி.டி. வந்தடையும்.
இதேபோல செப்டம்பர் 6-ந் தேதி மதியம் 1.15 மணிக்கு எல்.டி.டி.யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் மாலை 5.40 மணிக்கு நாகை சென்றடையும். இதே ரெயில் செப்டம்பர் 8-ந் தேதி மதியம் 3.20 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு எல்.டி.டி. வந்தடையும்.
இந்த ரெயில்கள் தானே, கல்யாண், லோனாவாலா, புனே, தவுன்ட், சோலாப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுரை, திருவாரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
01161, 01163 சிறப்பு கட்டண ரெயிலுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.