தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்



தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை பொன்னமராவதி பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ராமகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் அழகு, கல்வி மாவட்ட செயலாளர் புவியரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தேசத்தின் எதிர்காலக் கல்வியை சீரழிக்கும் தேசியக் கல்விக்கொள்கை 2020 ஐ திரும்பப்பெற வேண்டும். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை திரும்பத் தர வேண்டும், ஊக்க ஊதியம், சரண்டர், டி.ஏ. போன்ற பறிக்கப்பட்ட சலுகைகளை உடன் வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இ.எம்.ஐ.எஸ். பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆவுடையார்கோவிலுல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் கண்ணையா சிறப்புரை ஆற்றினார். வட்டார செயலாளர் சண்முக சுந்தரம் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் வட்டார பொருளாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments