இந்திய 75-வது ஆண்டு விடுதலை பெருவிழாவை முன்னிட்டு மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அஞ்சல் மண்டலத்தில் “அகவை 60 அஞ்சல் 20” என்ற சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்பு வங்கியானது பலதரப்பட்ட மக்களுக்கு சேமிப்பு சேவையை 100 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக வழங்கி வருகிறது. வருங்கால வைப்பு நிதிகணக்கு, குறித்தகால வைப்புகணக்கு, தொடர்வைப்பு கணக்கு, மாதாந்திர வருவாய்கணக்கு, தேசிய சேமிப்பு பத்திரங்கள், பெண்குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்புக்கணக்கு ஆகிய பலதரபட்ட மக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு சேமிப்பு கணக்குகள் உள்ளன. அப்படி மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கணக்குதான், “மூத்தகுடிமக்கள் சேமிப்புகணக்கு”. மத்திய அஞ்சல் மண்டலத்தில் 2022 மே மாதம் முடிவில் 61,800 மூத்தகுடி மக்கள் சேமிப்பு கணக்குகள் உள்ளன.
இத்திட்டத்தின் பலன்கள் மேலும் பல மக்களை சென்றடைய குறிப்பாக கிராமபுறத்தில் உள்ள மக்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய “அகவை 60 அஞ்சல் 20” என்ற சிறப்பு முகாம் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் “அகவை 60 அஞ்சல் 20” இன் இலச்சினை (லோகோ) வெளியிட்டு இத்திட்டத்தை பற்றி விரிவாக பேசினார்.
மேலும் புதியதாக இக்கணக்கை தொடங்கியவர்களுக்கு பாஸ்புத்தகம் வழங்கப்பட்டது. இக்கணக்கின் மூலம் பலனடைந்தவர்கள் பலர் இக்கணக்கின் முக்கியத்துவத்தை பற்றி பேசினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும், ஜூலை 21 முதல் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.