புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பதிவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை வருவாய் மாவட்டம் மற்றும் வருவாய் வட்டங்களின் அடிப்படையில், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் எல்லை சீரமைப்பு தொடர்பான, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் இயங்கிவரும் அறந்தாங்கி, பொன்னமராவதி, மீமிசல், சுப்பிரமணியபுரம், கீரமங்கலம் மற்றும் பேராவூரணி சார்பதிவகங்களில் உள்ள புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராமங்கள், அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.
மேலும் புதுக்கோட்டை பதிவு மாவட்டத்திற்குட்பட்ட 1 எண் இணை சார்பதிவகம், ஆலங்குடி, அன்னவாசல், குளத்தூர், கீழாநிலை, திருமயம், கந்தர்வகோட்டை, பெருங்களுர், மணமேல்குடி மற்றும் விராலிமலை சார்பதிவகங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களை அவை அமைந்துள்ள வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவகங்களுடன் இணைக்கப்பட உள்ளன.
இதுதொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசிற்கு அனுப்பி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.