புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி காலை 10 மணியளவில் பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கும், நண்பகல் 12 மணியளவில் பி.காம் (வணிகவியல்) பாடப்பிரிவிற்கும் நடைபெற உள்ளது.
மேலும் 18-ந் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், தேதி மற்றும் கட்டண விவரங்கள் கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரங்கள், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (அசல் மற்றும் நகல்கள் -4), 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (அசல் மற்றும் நகல்கள் -2), நிரந்தர சாதிச்சான்றிதழ் அட்டை (அசல் மற்றும் நகல்கள் -2), இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (நகல்கள் - 2), வருமானச் சான்றிதழ் (நகல்கள் - 2), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (4), வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகும். மேற்கண்ட தகவலை திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.