மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம தாசில்தார் அலுவலகங்களில் நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 100 சதவீதம் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ், விண்ணப்பித்து நிலுவையில் உள்ள மற்றும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் புதிதாக விண்ணப்பம் பெறுவதற்கும் மற்றும் அட்டை வேண்டி இதுநாள் வரையில் விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடமும் விண்ணப்பங்கள் பெற்று, திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி 12-ந் தேதி திருமயத்திலும், 16-ந் தேதி கறம்பக்குடியிலும், 17-ந் தேதி குளத்தூரிலும், 20-ந் தேதி புதுக்கோட்டையிலும், 23-ந் தேதி பொன்னமராவதியிலும், 24-ந் தேதி மணமேல்குடியிலும், 25-ந் தேதி கந்தர்வகோட்டையிலும், 27-ந் தேதி ஆலங்குடியிலும், 30-ந் தேதி விராலிமலையிலும், 1-ந் தேதி ஆவுடையார்கோவிலிலும், 2-ந் தேதி இலுப்பூரிலும், 3-ந் தேதி அறந்தாங்கியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் தாசில்தார்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.