மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டும், அரசு உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளை உறுப்பினர்களாக கொண்டு மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு திட்டங்களின் மூலமாக அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளின் கோரிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.