அறந்தாங்கியில் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி




    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி தனியார்ப்பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெற்று வரும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில், கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலை வகித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 300 தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில் 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டது. பயிற்சியாளர் பிரியா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.12 நாட்கள் பயிற்சிக்கு பிறகு 100 தன்னார்வலர்களுக்கும் தலா 9 ஆயிரம் மதிப்புள்ள பேரிடர் காலமீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அரசின் சார்பில் இலவச ஆயுட்காப்பீடும் செய்யப்படவுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments