கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம்.




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியை  கருமேகங்கள் கூட்டம் சூழ்ந்தது.

தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (ஆகஸ்ட் 22) டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் நேற்று ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை  பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5.00 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments