மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய 3 குறுவள மையங்களுக்கு உட்பட்ட தொடக்கநிலை மற்றும் உயர் நிலை தன்னார்வலர்களுக்கு 2 நாள் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் எண்ணும் எழுத்தும் தொடர்பான தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாகவும், கதை சொல்லுதல் மூலமாகவும் மாணவர்களுக்கு எவ்வாறு கற்றல் கற்பித்தல் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியின் கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர் தேவராஜ், ஆசிரியர்கள் குளோரி ஸ்டெல்லா, செந்தில்குமார், பிரியதர்ஷினி, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.