SDPI கட்சி சார்பாக கோட்டைப்பட்டினம் நடைபெறவிருந்த சாலைமறியல் போராட்டம் ஒத்திவைப்பு




SDPI கட்சி சார்பாக கோட்டைப்பட்டினம் பொன்னன் வயல் ஏரி கர்த்தன்குளம் வருத்துவாரி ஆக்கிரமிப்பு சம்பந்தமாக 25/8/2022 அன்று சாலை மறியல் அறிவித்திருந்தோம்


 அது சம்பந்தமாக இன்று 24/8/2022 மணமேல்குடியில் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது  

இந்த கூட்டத்தில் கோட்டைப்பட்டினம் வருவாய் ஆய்வாளர். கிராம அலுவலர். கிராம உதவி அலுவலர். அதிகாரிகள் து வட்டார வளர்ச்சி அலுவலர்.  கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர். மற்றும் SDPI கட்சி சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளான  SAM அரபாத் முகமது அப்துல்லா மாநில வர்த்தக அணி  செயலாளர்,F முகமது சாலிஹ் மாவட்ட செயலாளர்,M முகமது மைதீன்(செல்லத்தா) அறந்தாங்கி  தொகுதி தலைவர்,S பசீர் அகமது அறந்தாங்கி தொகுதி து தலைவர்,A.முகமது அப்துல்காசிம்  நகர தலைவர் மற்றும் M.அரபாத்கான் நகர செயலாலர் ஆகியோர் முன்னிலையில் சமாதான கூட்டம்  நடை பெற்றது 

 எங்களுடைய கோரிக்கையை ஏற்றுகொன்டு  நவம்பர் மாதம் 2022 ஆண்டு தேதிக்குள் ஆக்ரமிப்பை  அகற்றி தருவதாக தாசில்தார் முன்பாக எழுதி கையொப்பமிட்டு  உத்திரவாதம் தந்து சாலை மறியலை கைவிடு மாறு கேட்டுகொண்டதற்க்கு  இணங்க நாளை நடக்க  இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments