புதுக்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து கிடக்கிறது. விபத்தை தடுக்க இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து சிக்னல் கம்பம்
புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதி உள்ளது. இதில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை பிரியும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை கடந்து தான் கவிநாடு பகுதிக்கும், அங்கிருந்து புதுக்கோட்டைக்கும் வாகனங்கள் வர வேண்டும். போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில் விபத்தை தடுக்க போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சாலையை உணர்த்தும் வகையில் சிக்னல் கம்பத்தில் உள்ள விளக்குகள் விட்டு, விட்டு ஒளிரும் தன்மை கொண்டது. இந்த நிலையில் இரு புறமும் தலா ஒரு சிக்னல் விளக்கு கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு சிக்னல் விளக்கு கம்பம் கீழே விழுந்து சாய்ந்து கிடக்கிறது. அந்த சிக்னல் கம்பத்தின் மீது வாகனம் மோதியதால் சேதமடைந்து கீழே சரிந்து விழுந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இரும்பு தடுப்புகள்
இந்த சிக்னல் கம்பம் சாய்ந்து கிடப்பதால் அதில் விளக்குகள் ஒளிருவதில்லை. மேலும் சிக்னல் விளக்கு இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே இந்த சிக்னல் விளக்கு கம்பத்தை சீரமைத்து பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வாகனங்கள் வேகமாக கடந்து செல்வதை தடுக்க இரும்பு தடுப்புகளை வைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.