மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் திருச்சி பஸ்கள் நிறுத்துமிடம் அருகே மணி என்பவரின் டீக்கடை உள்ளது. இந்த டீக்கடையின் கான்கிரீட் சிமெண்டு பூச்சு மேற்கூரை நேற்று காலை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் கோவையை சேர்ந்த சுகுமார் (வயது 50) காயமடைந்தார்.
அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார், நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இடிந்த இடிபாடுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல ஒரு கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்குமேல் ஆனது. கட்டிடத்தில் பெரும்பாலான இடங்களில் கான்கிரீட் சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.