கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அத்துமீறல்...



கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர்.

மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நிஷாந்த் (வயது 38), ஆண்டி(55), கருணாநிதி(46), உலகநாதன்(50), சூசை வியாகுலம்(55) மற்றும் சேசு ஆகிய 6 மீனவர்கள் மற்றும் படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் படகுகளுடன் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருவதால் மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments