பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி கோரிக்கை ஏற்று சென்னை முதல் செங்கோட்டை வரை அறந்தாங்கி, மானாமதுரை வழியாக ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீட்டர் கேஜ் பாதையாக இருக்கும் போது இயக்கப்பட்டது. அகல ரயில் பாதையாக மாற்றிய பின் இந்த ரயிலை மீண்டும் இயக்கவில்லை. இதனை அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை கடிதம் எழுத்தியிருந்தார்கள்.
இந்த கோரிக்கை ஏற்று தென்னக ரயில்வே பொது மேலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், கம்பன் விரைவு ரயிலுக்கு பதில் தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, புதுவயல், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்படும் எனவும், இந்த ஆண்டு ரயில்வே அட்டவணையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.