வேளாங்கண்ணி திருவிழா முன்னிட்டு வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்



 


'சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி, பயணியர் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயணியர் செல்ல உள்ளனர்.

இந்நேரத்தில் நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் எண் 07357: வரும் 27ம் தேதி முதல் சனிக்கிழமை  வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07358: வரும் 28ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை  வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, 30ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

எண் 07359: செப்., 2ம் தேதி வெள்ளிக்கிழமை வாஸ்கோடகாமாவில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7:10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.மறுமார்க்கத்தில் எண் 07360: செப்., 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

எண் 07361: செப்., 6ம் தேதி வாஸ்கோடாகாமாவில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.எண் 07362: செப்., 8 ம் தேதி வியாழக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments