மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சேர்ந்த இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்கள்...






கோபாலப்பட்டிணம் சேர்ந்த  மர்ஹூம் கலந்தர்  ஹாஜியார் அவர்களின் சகோதரரும் அப்துல்லா ஹாஜியார் அவர்களின் சிறிய தகப்பானாரும் ஹிதயாத் ரஹ்மான் , செய்யது அபுதாஹிர் அவர்களின் மாமனாரும் நாகூரில் வசித்த வந்த நாகூர் அல் இஹ்ஸான் அன்மீக அறக்கட்டளை நிறுவனர் திருவாடானை  வட்டார ஜமாஅத்துல் உலமா பாட திட்டத்தில் இருக்கிற உஸ்வத்துன் ஹஸனா என்ற பாட நூலின் மூல நூலான ஈருலக வெற்றி என்ற நூலின் ஆசிரியர் மௌலானா மௌலவி முஹம்மது இப்றாஹீம் ரஹ்மானி ஹழ்ரத்  அவர்கள் இன்று 12-08-2022 வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா இருப்பிடம்

நாகூர் மஸ்தான் கனி மஸ்ஜித் (கொல்லம் பள்ளி) பின்புறம் உள்ள அவர்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது...

ஜனாஸா நல்லடக்கம்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 8.00 (12-08-2022) நாகூர் ஷரீஃப் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments