கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்வித்த மழை





கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்வித்த மழை பெய்து வருகிறது 

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் செப்.,3 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் இன்று ஆகஸ்ட் 31 புதன்கிழமை  பகலில் வெயிலின் தாக்கம்  இருந்தது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது 

இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments