ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கல்வி துறையால் நடைபெற உள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் கபாடி போட்டிக்கும் சிறப்பாக பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஒக்கூரில் 55 கிலோ எடை பிரிவினருக்கான கபாடி போட்டி நடைபெற்றது.இதில் பள்ளியின் சார்பில் பயிற்சி பெற்று வரும் சக்திவேல் தலைமையிலான கபாடி அணியினர் கலந்து கொண்டு நான்காம் இடம் பெற்று ₹5000 ரொக்க பரிசையும் , வெற்றி கோப்பையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பயிற்சி அளித்த தமிழாசிரியர் குமார், பொருளியல் ஆசிரியர் சுப்பிரமணியன் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.