10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த மாணவி செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் நலக்குழுவினர் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் விராலிமலையை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் (வயது 30) என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று செங்கல் சூளைக்கு அருகே உள்ள கொட்டகையில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று அதிரடி தீர்ப்பு கூறினார்.
இதில் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், மாணவியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.