முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன
முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன.
முத்துமாரியம்மன் கோவில்
ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆவணி மாத பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இந்த போட்டி பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி இலக்காக பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், நடுமாடுகளுக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் மாடுகளுக்கு 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்
முதலில் பெரிய மாடுகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதனை சாலையின் இருபுறமும் ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்த போட்டியில் அம்மன்பேட்டை சகாயராணி பொய்கை வயல் முத்துக்கருப்பர் மாடுகள் முதல் பரிசை தட்டி சென்றன, 2-ம் பரிசை பரளி சித்தர் எட்டிமங்களம் பங்கஜ் கணேசன் மாடுகளும், 3-வது பரிசை பூக்கொல்லைகாளி ரீத்தீஷ்வரன் மாடுகளும் தட்டி சென்றன.
நடுமாட்டில் முதல் பரிசை கழுகுமனை குப்பத்தேவன் மாடுகளும், 2-வது பரிசை பட்டாங்காடு காத்தாயி அம்மன் மாடுகளும், 3-வது பரிசை வள்ளல் நாட்டார் மாடுகளும் தட்டி சென்றன.
பரிசுகள்
இதையடுத்து, கரிச்சான் மாடுகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில், 27 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டி பத்திரம் பாரிவள்ளல் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.