புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குழந்தைகள் தொடர்புடைய துறை தலைவர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் காலமுறைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு அனைத்து துறைத்தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராம அளவிலான, ஒன்றிய அளவிலான, நகர பஞ்சாயத்து அளவிலான மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று துறைத்தலைவர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நடுவர் பாபுலால், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.