இன்று முதல் புதிய மின் கட்டண உயர்வு அமல்.. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!




தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்த்துள்ளது.

தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு அளித்தது.

இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்த்துள்ளது.

இதன்மூலம் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் 2026 - 27 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments