கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் பழைய காலனி (ஊற்று) சாலை! கண்டுகொள்ளுமா ஊராட்சி மன்ற நிர்வாகம்!!




    கோபாலப்பட்டிணத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் பழைய காலனி அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலையில் எரியாத தெரு விளக்கினை சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் பழைய காலனி அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை, நடுத்தெரு ஆகிய இடங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.

பழைய காலனி அரண்மனை தோப்பிற்கு (ஊற்று) செல்லும் சாலை மற்றும் நடுத்தெருவில் உள்ள தெரு விளக்குகள் கடந்த பல மாதத்திற்கு மேலாக எரியவில்லை. நடுத்தெரு-பழைய காலனி சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

மேலும் பெரியவர்கள், சிறியவர்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் அரண்மனை தோப்பில் உள்ள ஊற்றில் குடிதண்ணீர் எடுத்து செல்பவர்கள், அப்பகுதி வழியாக மீமிசல் சென்று வரக்கூடிய பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக குடிநீர் எடுத்து செல்லுக்கூடிய பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் விஷ பாம்பு, விஷ ஜந்துக்கள் சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் ஊற்று தண்ணீர் எடுத்து நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியும் எரியாத மின் விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் அப்பகுதி சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில் எரியாத தெருவிளக்கை சரி செய்ய வேண்டி கடந்த திங்கட்கிழமை ஊராட்சி மன்ற செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேசினேன் அப்பொழுது இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் சரி செய்யப்பவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பழைய காலனி, நடுத்தெரு சாலை மற்றும் கோபாலப்பட்டிணம் முழுவதும் ஒரு சில இடங்களில் எரியாத மின் விளக்குகள் சரி செய்து கொடுத்து கிராம மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments