மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாடக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சீனி முகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ளேன். இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரி சபையின் முதல் கல்வி மந்திரியுமாக மவுலானா அபுல்கலாம் ஆசாத் இருந்தார். கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தினார். அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தார். நம் மாணவர்களுக்காக பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அவரது பிறந்த நாளான நவம்பர் 11-ந்தேதியை கல்வி நாளாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை. எனவே மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந்தேதியன்று பள்ளிகளில் அவருடைய உருவப்படம் வைத்து விழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 28-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடுகிறோம் என்றனர். பின்னர் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.