10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் இப்போதில் இருந்தே தயாராகும் விதமாக கல்வித்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பொதுத் தேர்வை எழுத இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், பொதுத் தேர்வை மன அழுத்தத்துக்குள்ளாகாமல் எதிர்கொள்ளும் வகையிலும் அவர்களை தயார்படுத்த பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்றும், இது 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்த தகவல் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்ற மாவட்டங்களிலும் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இது ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதான் என்றாலும், இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.