புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு இன்றைய வழிபாட்டு கூட்டத்தில் "நான் ஓசோன் பேசுகிறேன்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மன்ற செயலரும் முதுகலை தாவரவியல் ஆசிரியருமான செந்தில்குமார் அவர்கள் ஓசோன் உருவாகும் விதம், அதன் நன்மைகள், ஓசோன் படலத்தை பாதிக்கும் காரணிகள் மற்றும் அதை எவ்வாறு குறைப்பது பற்றி எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பள்ளி இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன் மரக்கன்றுகள் வழங்கினார். அம்மரக்கன்றுகளை பசுமைப்படை மன்றத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமையில் நடப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித்திட்ட
திட்ட அலுவலர் குமார், பசுமைப்படை மன்றச் செயலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.