ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத் தில் உள்ள பெண்டபாடு அடுத்த வீரபாளையத்தை சேர்ந்தவர்கள் தாவித்-நிர் மலா தம்பதி. இவர்களுக்கு ஆகாஷ்(13), அம்ருதா(12), அலைக்கியா(11) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் தாவித் சரியாக குடும்பம் நடத்த பணம் தராமல் குடித்து அடிக்கடி சண்டை யிட்டு வத்துள்ளார். இதனால், குடும்பத்தின் நிதி சுமையை போக்கவும் தனது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டும் ஏஜெண்ட் ஒருவர் மூலம் நிர்மலா துபாய்க்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இதனால், எந்தவித பணிக்கும் செல்லாமல் மனைவி அனுப்பும் பணத்தை வைத்துக் கொண்டு குடித்து கொண்டு ஊர் சுற்றி வத்துள்ளார்.
இந்நிலையில், தாவித் தனது மனைவி நிர்மலா மீது சந்தேகம் கொண்டு தனது 2 குழந்தைகளான அமிர்தா மற்றும் அலேக்யாவை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அதனைசெல்போனில் வீடியோ வாக பதிவு செய்து துபாயில் உள்ள மனைவிக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்கு வரும்படியும் இல்லாவிட்டால் மகள்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அடிக்காதே என்று பிள்ளைகள் கெஞ்சினாலும் அசுர தந்தையின் கொடூர எண்ணம் மட்டும் கரைந்ததாக இல்லை.
இந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்மலா இதுகுறித்து பஞ் சாயத்து தலைவர் சூரியக லாவிற்கு போன் செய்து தெரிவித்து வீடியோவை அனுப்பி தன் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, சூரியசுலா ஆந்திர மாநில துணை முதல்வர் சத்திய நாராயணா உதவியுடன் தாடேபள்ளி போலீசில்நேற்று முன்தினம் புகார் அளித்தார்
போலீசார் தன்னை வருவதை அறிந்த தாவித் தனது குழந்தை களை உறவினர் வீட்டில் வீட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து. அங்கு சென்ற போலீசார் குழந்தைகளை மீட்டனர். இந்த வீடியோ வைரலாகிய நிலையில் அந்த கொடூர தந்தையை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மகளிர் அமைப்பி னர் கோரிக்கை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.