தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அந்த வகையில், பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாளில் அவர்கள் கையில் புத்தகம் இருக்கும்படி ஏற்கனவே பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விலையில்லா பொருட்கள் ஒவ்வொன்றாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்காக விலையில்லா புத்தக பைகள் மற்றும் செருப்புகள் வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக புத்தக பைகள் மற்றும் செருப்புகள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விலையில்லா புத்தக பைகள், செருப்புகள் நேற்று வந்தன.
புத்தக பைகள்
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கான விலையில்லா புத்தக பைகள், செருப்புகள் பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாடப்புத்தக பைகள் சிறியவை 9 ஆயிரத்து 965 எண்ணிக்கையிலும், பெரியவை 33 ஆயிரத்து 448 எண்ணிக்கையிலும், செருப்புகள் மாணவர்களுக்கு 13 ஆயிரத்து 810 எண்ணிக்கையிலும், மாணவிகளுக்கு 14 ஆயிரத்து 386 எண்ணிக்கையிலும் வந்துள்ளது.
இதேபோல அறந்தாங்கி, இலுப்பூர் கல்வி மாவட்டத்திற்கும் வந்துள்ளதாக கல்வி துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இந்த புத்தக பைகள், செருப்புகள் விரைவில் மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.