புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 3 நாட்கள் நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு நாளை (புதன்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 நாட்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பக்கத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வரலாம்.
இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை. உடற்தகுதிகள், காவல்துறையைப் போன்றது. குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரியபடித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments