அரிமழம் பசுமை மீட்புக்குழு மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து 5001 பனை விதைகள் நடும் விழா!



அரிமழம் பசுமை மீட்புக்குழு மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து 5001 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பசுமை மீட்புக்குழு மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து நடத்தும் புன்னகையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் அரிமளம் பேரூராட்சி சேத்துக்கண்மாய் பாலம் முதல் மறமடக்கி ஏரிகரை, அரிமளம் குளவாய்ப்பட்டி ரோடு போன்ற பகுதிகளில் 5001 பனை விதைகள் நடும் நிகழ்வை அரிமழம் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துக்குமார் தொடங்கிவைத்தார். அரிமழம் பசுமை மீட்புக்குகுழு தலைவர் டைமண்ட் கண்ணன் மற்றும் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
இந்நிகழ்வில் அரிமழம் பசுமை மீட்புக்கு குழுநிர்வாகிகள் மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments