சென்னை - மைசூரு இடையே நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில்: நவ.,10 முதல் இயக்கம்






நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - பெங்களூரு - மைசூரு இடையே நவம்பர் 10‌ முதல் இயக்கப்படுகிறது 

நாட்டிலேயே அதிக வேகமாக  செல்லும் "வந்தே பாரத்" ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.-ல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரெயில்கள்

புது டெல்லி - வாரணாசி, 
புது டெல்லி -ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, 
காந்தி நகர் - மும்பை 
அம்ப் அந்தாரா -புதுடெல்லி 

என 4 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை - பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் எனத்தெரிகிறது. 

அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த வழித்தடத்தின் தொலைவு 483 கி.மீட்டர் ஆகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments