புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, வருகிற 12-ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி




காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
12-ந் தேதி நடக்கிறது


புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி வருகிற 12-ந் தேதி புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு முடிய மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் பற்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments