தென்னக ரயில்வே ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு தாம்பரம்- நாகா்கோவில் இடையே திருச்சி, மதுரை மாா்க்கத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே புதுக்கோட்டை வழியாக தீபாவளிப் பண்டிகை மற்றும் ஆயுத பூஜைக்கும் சிறப்பு ரயில்களை இயக்கியது. இது புதுக்கோட்டை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், மற்ற ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைத்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக புதுக்கோட்டை வழித்தடத்தில் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
ஏற்கெனவே ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு புதுக்கோட்டை வழித்தடத்தில் தினசரி சென்னை சென்று வரும் பல்லவன், போட் மெயில், சேது உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பே 200-ஐத் தாண்டி காத்திருப்புப் பட்டியலுக்கு சென்றுவிட்டன.
இந்நிலையில், யாரும் எதிா்பாா்த்திராத வகையில் புதுக்கோட்டை வழியாக நிகழாண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில், மறுமாா்க்கத்தில் அக். 6 அன்று தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது. இதேபோல், நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கும் தாம்பரம்- செங்கோட்டை இடையே திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகா் வழியாக சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது.
மேலும், புதுக்கோட்டையைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கோரிக்கையை மத்திய ரயில்வே அலுவலா்களிடம் முன்வைத்து வலியுறுத்த வேண்டும் என்றும் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.