குவைத் நாட்டில் சிக்கி தவிக்கும் கறம்பக்குடி வாலிபரை மீட்க கோரிக்கை




கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி சாஞ்சாடி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், விவசாயி. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 28). இவர் கடந்த மாதம் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒருவாரம் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. அதன்பின்னர் வேலை வழங்கவில்லை. இதனால் தமிழ்செல்வன் கடந்த 20 நாட்களாக வேலை எதுவும் இன்றி பசி பட்டினியோடு தவித்து வருகிறார். இவரை போலவே தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் சிலர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்செல்வனின் தந்தை தியாகராஜன் கூறுகையில், மதுரை மேலூரை சேர்ந்த முகவர் மூலம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தி எனது மகன் குவைத் சென்றார். ஆனால் தற்போது அங்கு வேலை இல்லாமல் பசியோடு தவித்து வருவதாக போனில் தெரிவித்து கதறி அழுதார். எனது மகனை போலவே அந்த முகவர் மூலம் சென்ற சில இளைஞர்களும் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே குவைத்தில் சிக்கி வேலையின்றி தவித்து வரும் எனது மகன் உள்ளிட்ட தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments