காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 13-ந் தேதி தொடங்குகிறது.
பள்ளிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு நிறைவடைந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகள் கடந்த 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன. இந்த நிலையில் விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதில் 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் நாளில் அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதேபோல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி ஒன்றிய அளவில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), 12-ந் தேதியும் நடைபெற உள்ளன. ஆசிரியர்களுக்கு பயிற்சியின் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
இதனால் மேற்கண்ட நாட்களில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சிக்கு வருவார்கள். மாணவர்கள் பள்ளி வரமாட்டார்கள். அவர்கள் 13-ந் தேதி வகுப்புக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.